Search Engine Submission - AddMe

எப்படி இருக்க வேண்டும் ‘ரெஸ்யூம்’?


தனியார் நிறுவனங்கள் அதிகளவில் பெருகியுள்ள இன்றைய சூழலில், வேலை வாய்ப்பை பெற, பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்களை நம்பியே களமிறங்குகின்றனர்.
விரும்பிய பணியை நல்ல ஊதியத்தில் பெற நடக்கும் போராட்டத்தில், ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் (Resume) முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் தனது தகுதி, திறமை, அனுபவம், சாதனை போன்றவற்றை அந்த சுயவிவர விண்ணப்பத்தின் மூலமாகவே வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒருவரின் சுயவிவர விண்ணப்பம் எந்தளவு ஒரு நிறுவன அதிகாரியை கவர்கிறதோ, அதைவைத்தே அவரின் வேலைவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது எனலாம்.

சிறப்பான வகையில் சுயவிவர விண்ணப்பம் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

எளிமை:சுயவிவர விண்ணப்ப வடிவமைப்பில் கடினமான மற்றும் சிக்கலான வழிமுறைகளை பயன்படுத்த வேண்டாம். படிப்பவரை குழப்பும் வகையில் அதிக தகவல்களை சேர்க்க வேண்டாம். உங்களின் சுயவிவர விண்ணப்பம் குறைந்த நேரத்திலேயே படிக்கப்படும் அளவிற்கு விஷயங்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய தகுதிகள் மேல்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நேர்த்தி:உங்கள் சுயவிவர விண்ணப்பம் ஆர்வமூட்டுவதாகவும், உங்கள் பணி சாதனைகளை சுருக்கமாக மற்றும் அழகாக சொல்வதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலம் நிறுவன அதிகாரிகள் உங்கள் திறனை எளிதாக தெரிந்துகொண்டு, உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்கள். மேலும் நீங்கள் சாதித்த சில அரிதான மற்றும் வித்தியாசமான விஷயங்களை சுருக்கமாக குறிப்பிட்டால் உங்கள் பணி வாய்ப்பை அது மிகவும் அதிகரிக்கும்.

பணி இடைவெளி:நீங்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் பணியில் இல்லாமல் இருந்திருந்தால், அதை குறிப்பிட தயங்க வேண்டாம். ஏனெனில் இன்றைய பொருளாதார சூழலில் அந்த விஷயத்தை ஒரு நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. ஆனால் அந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் வேறு ஏதாவது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு, உங்கள் சுய திறன்களை வளர்ப்பதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவற்றை குறிப்பிடவும்.

வகைப்படுத்தல்:இன்றைய இன்டர்நெட் யுகத்தில் உங்கள் சுயவிவர விண்ணப்பத்தை இணையத்தில் செலுத்தி, அதன்மூலம் ஏராளமான நிறுவனங்களை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தமுறையில் சுயவிவர விண்ணப்பம் ஒரே வடிவமைப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். நாம் எந்த மாதிரியான பணிக்காக விண்ணப்பிக்கிறோமோ, அதற்கேற்ற விதத்தில் சுயவிவர விண்ணப்பம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விதியை தெரிந்திருத்தல்:நீங்கள் சர்வதேச அளவிலான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு நாட்டிலும் சுயவிவர விண்ணப்ப சமர்ப்பிப்பில் எந்தமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை முன்பே தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில் சில நாடுகளில் சுயவிவர விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் சில நாடுகளில் அந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே போட்டி நிறைந்த இன்றைய வர்த்தக உலகில் உங்கள் சுயவிவர விண்ணப்பம், தேவையான இடத்தில், தேவைப்படும் விதத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றினால் வேலைக்கான போட்டியில் நீங்கள் முந்தி செல்வதை உறுதி செய்யலாம்.

நன்றி :கல்விமலர்
Source:http://kalvimalar.dinamalar.com

ஆலோசனைகள் தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி: இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி:ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.தொடர்புக்கு:ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சிவிமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது. ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம். 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும். 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும். அழகான தோற்றம் தேவை.இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப் பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து "ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது.வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.முகவரி:தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல்டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ், 2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736. செல்: 98401 16957.

நன்றி :தினமணி 
Source:http://www.dinamani.com/

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை

சென்னை, செப். 29: வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்ட அறிவிப்பு:பதிவு செய்தவர்கள் தங்களது பதிவினை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கும் மாதத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலோ தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை கால அவகாசம் ஒரே ஒருமுறை மட்டும் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது.இப்போது அரசால் கம்ப்யூட்டர் வழியே ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைனில் புதுப்பிக்க ஏதுவாக ஒரேசீரான நடைமுறை கடைப்பிடிக்கும் வகையில் 18 மாத புதுப்பித்தல் சலுகையை மறுமுறை கோரினாலும் அனுமதிக்கலாம் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த 18 மாத புதுப்பித்தல் சலுகை தளர்த்தப்பட்டு அடுத்த புதுப்பித்தல் தேதிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு, விடுபட்ட பதிவினை 18 மாத சலுகையின்படி, புதுப்பிக்கையில் பழைய பதிவு மூப்பு கணக்கில் கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமணி 
Source:http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&artid=310856&SectionID=97&MainSectionID=97&SEO=&SectionName=Chennai 

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்



சென்னை, செப். 15: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை வகித்தார்.ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.inஆன்லைனில் பதிவு செய்யும் முறை1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன. 

நன்றி : தினமணி 
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=303619&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

வேலைவாய்ப்பு தேடுவோர் 70 லட்சம் பேர்

சென்னை, செப். 14: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தின் கீழ் | 5.02 கோடியில் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் புதிய முறை புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
முன்னதாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கடந்த 31.12.2009 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது. இதில் பெண்கள் 28.43 லட்சம் பேர்.
84 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற கதையாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் விரிவுரையாளர் முதல் மருத்துவமனை ஊழியர் வரை 57 வகையான பணியிடங்களில் கடந்த 13.5.2006 முதல் 2009 வரை 84,407 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
எப்போதுமே, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், மருத்துவப் படிப்புகளில் (அலோபதி முதல் அக்குபஞ்சர் மருத்துவர் வரை) பட்டம் பெற்ற 21,459 பேர் வேலைவாய்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 1.20 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2.21 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1.45 லட்சம் பேரும், எம்.எட். பட்டம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 23 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
மின் ஆளுமை மயமாக்கும் பணி:
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் (உயிர் பதிவேட்டு) விவரங்களை கணினி மூலம் இணையதளத்தில் ஏற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதன்மூலம், பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.
கடந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின்னர் சுமார் 7.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புப் பதிவுக்கான ஏராளமான விண்ணப்பங்கள் அந்தந்தப் பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, ஆசிரியர்கள் உதவியுடன் விவரங்களைப் பதிவு செய்யும் புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:
இதுதவிர, கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகஙகளில் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை நிரப்பி, வேலைவாய்ப்புப் பதிவு அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் மனு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத் தவறியவர்களில் 1.50 லட்சம் பேர் இந்தச் சிறப்பு சலுகையின் மூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, வேலைதேடும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளது.


நன்றி: தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=303327&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%2070%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D

2006 முதல் 2009 -ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

திருச்சி, ஜூலை 9: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.    இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. தட்சிணாமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:         2006, ஜனவரி 1 முதல் 2009, டிசம்பர் 31 ஆம் தேதி வரை பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.      இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற விரும்புபவர்கள் அவரவர் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது  பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.     2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  இந்தச் சலுகை ஜூலை 5 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்கப்படாது.      2006 ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது  2005, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுப்பிக்கத் தவறியவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏற்கெனவே இதுபோன்ற புதுப்பித்தல் சலுகை பெற்றிருந்து மீண்டும் புதுப்பிக்கத் தவறியிருந்தால், இந்த அரசாணையின் கீழ் சலுகையைப் பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.    2006, 07, 08 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறி புதிதாகப் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சலுகையின்படி விண்ணப்பித்து பழைய பதிவு மூப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர். 

நன்றி:தினமணி 
source:

ஆசிரியர் பட்டதாரிகளுக்கு சில டிப்ஸ்...

ஆசிரியர் பட்டதாரிகளுக்கு சில டிப்ஸ்...



படித்தால் அரசு வேலை உறுதி என்ற நிலை மற்றப் படிப்புகளைக் காட்டிலும் ஆசிரியர் படிப்புக்கு உண்டு. இதனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.

2008-09-ம் கல்வி ஆண்டில் 545 எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 2009-10-ம் கல்வி ஆண்டில் 645 கல்லூரிகளாக அதிகரித்துள்ளது. இது இந்தக் கல்வியாண்டில் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இதே போல் மாணவர்களின் எண்ணிக்கையும் 59 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாக வெளியே வருகின்றனர்.

ஆனால் படிப்பை முடித்த பிறகு தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக கிராமத்து இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டி இல்லை. இதனால் தங்களது பதிவு மூப்பை நழுவ விட்டுவிட்டு அரசு வேலை கிடைக்கவில்லையே... எனக்கு பின்னால் படித்தவர்களுக்கு வேலை கிடைத்து விட்டதே... என்று புலம்புபவர்களையும் பார்க்க முடிகிறது.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் கல்வியியல் கல்லூரித் தேர்வு நடந்து வரும் நிலையில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...

பதிவுமுறை: இளநிலை பட்டப் படிப்புகளை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடலாம். ஆனால் முதுநிலைப் பட்டப் படிப்புகளை சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில்தான் பதிய முடியும்.

இதன்படி, இளநிலை பட்டப்படிப்பை முடித்து ஆசிரியர் கல்வியில் கல்லூரி பட்டப் படிப்பை முடித்த இளநிலை பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் பதிந்தால் போதும். அதாவது பி.எஸ்.சி., பி.எட்., பி.ஏ. பி.எட்., படித்தவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தால் போதும்.

இதன் பின்னர் எம்.எஸ்.சி. எம்.ஏ. படித்து முடித்தால் தங்களது கல்வித் தகுதியை சென்னையிலோ அல்லது மதுரையிலோ உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பி.எட்., படிப்பையும் அதனுடன் சேர்த்து பதிவு செய்வது அவசியம். அவ்வாறு பி.எட்., படிப்பை அங்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டால் முதுநிலை ஆசிரியருக்கான பணி வாய்ப்பு பறிபோய்விடும்.

இதே போல் எம்.எஸ்.சி., எம்.ஏ. படிப்பை முடித்த பிறகு பி.எட்., படிப்பை நிறைவு செய்பவர்கள் நேரடியாக சென்னை அல்லது மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிய விட்டுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வாய்ப்பு பறிபோய்விடும்.

எனவே முதுநிலை பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்கள் கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முறைப்படி பதிவு செய்திருந்தால்தான் வாய்ப்பு வரும்போதும் பதிவு மூப்பு பட்டியலில் பெயர் வரும்.

நன்றி:தினமணி 

Special Renewal Concession 2006 - 2009

2006 முதல் 2009 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு

 
பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
*
சென்னை, அண்ணா நகரில் அமைப்புசாரா வாரியம் மற்றும் தொழிலாளர் துறைக்கு தனி கட்டிடம் கட்டப்படும். இதற்கான செலவை தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நலவாரியம் ஏற்கும்.
* தொழிலாளர் துறையின் எல்லா செயல்பாடுகளையும் கணினி மயப்படுத்தி, மின் ஆளுகை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை நிர்வாகத்தில் மின் ஆளுகை திட்டம் 'லீட்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 60 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 3 ஆண்டு தொடர்ந்து உறுப்பினராகவும் இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* தொழிலாளர் நலவாரியம், பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் திருமணம் அல்லது மகன், மகளுடைய திருமண உதவியாக ஆணுக்கு ரூ.3000ம், பெண்ணுக்கு ரூ.5,000 வழங்கப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் தலைக்கவசம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர், முடித்திருத்துவோர், காலணி, தோல் பொருட்கள், பொற்கொல்லர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் செய்ய தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.
* 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் இந்த ஆண்டு புதுப்பித்துக் கொள்ள சலுகை அளிக்கப்படும். இதன்மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
* தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
நன்றி:தினகரன்