சென்னை, நவ. 18: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008-ம் ஆண்டு தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகையை அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2008 வரை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் இப்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதுப்பித்துக் கொள்ள விரும்புபவர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான கடைசி தேதி நவம்பர் 23 ஆகும். கடைசி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் த. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி